கார்த்திகேயன்

படியளக்கிறான் பரமசிவன்.

எறும்பைஅடைத்து வைத்து

பார்த்து விட்டாள் பார்வதி.

பட்டினியில் பாரதிகள் பாடிக்கொண்டே...

மாநாடு

பேசி முடிந்தாகிவிட்டது

வாழ்க ...ஒழிக...கோசங்கள்
டீக்கடை மேசை உடைப்பில்

எதிரொலிக்கிறது.

ஈரத்துண்ட இழுத்துக்கட்டுங்க

பாரதத்தின் பட்டினி

பக்கத்து விட்டுக்கரருக்கு

தெரிந்துவிடப் போகிறது .

ஒரு தாய் தன் பிள்ளையிடம்

முணுமுணுப்பது

எத்தனை பேரின் காதில்விழுகிறது

சொல்லுங்கள் ...........

கார்த்திகேயன்

களிமண்ணிலா ...

இறைவன் மனிதனை படைத்தான் .

சிரிப்பகத்தான் இருக்கிறது .

முத்தமிடத் தெரியாதவனின்

கதையை படிக்கும் போது.

கார்த்திகேயன்

மரம் வைத்தவன்

தண்ணீர் ஊற்றுவான்.

நல்ல பழமொழி .

கடவுளை முன் வைத்தே

மறுப்பதற்கு .

கார்த்திகேயன்

துப்பட்டா குடைக்குள்

நனைந்து கொண்டிருக்கிறது

உதடுகள் .

உழவு மழை ஆனாலும்

உழ முடியாது

கடற்கரையில் கற்பு .

கார்த்திகேயன்
ஒவ்வொரு நாளும்
தூக்கத்தை தொலைத்து
காத்திருக்கிறார் ..விவசாயி ..
அறுவடைக்கு அல்ல
நடப்பட்ட பயிருக்கு
உயிர் பாய்ச்ச
வருமா ...மின்சாரம் என்று
ஒ ...
இது தான்
இழவு காத்த கிளியோ .
கார்த்திகேயன்
சொட்டுச் சொட்டாய்
சொட்டிக் கொண்டிருக்கிறது .
தெருக் குழாய் .
தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறார்
ஊர் பிரசுரெண்டு .
கார்த்திகேயன்
௧௩௩0 குரலையும் தாண்டி
தமிழ் வளர்க்கும்
பேருந்தில் ,
பயணச் சீட்டு மட்டும்
ஆங்கிலத்தில் .
கார்த்திகேயன்
கடவுளை எதிர்த்து
கறுப்புச் சட்டை மாநாடு .
நல்ல நேரம் பார்த்து
பேச வருகிறார் .
எக்ஸ்எம் எல்ஏ .
கார்த்திகேயன்
மரம் வளர்ப்போம்
மாநிலம் காப்போம் .
அழகான ஓவியத்தோடு
இயற்கையாய் அமைந்ததிருக்கிறது
மரத்தாலான விளம்பர பலகை.
Blogger இயக்குவது.