கார்த்திகேயன்

நெஞ்சியில உருளும் உன் நெனப்பு

நெசமா சொல்றன் அது எம் பொழப்பு

நேந்துகிட்ட நேர்த்திக்கடன்

சேக்குலன்னு ....

சாமி குத்தம் ஆயிடுச்சா சொல்லு கண்ணு

நா .....காஞ்ச வெறவா...

காட்டத்து வெள்ளமா ...

கரிச்சான் குருவியின்

தொண பிரிஞ்ச கத்தலா ...

எம் பொழப்பு என்னாவும்

கை கால் வரல

கத சொல்ல வாய் வல்ல

கர சேரும் ஒடமுன்னு

காத்தடிப் பாத்தன்

கல்லை கட்டி போட்டப்ள

சொல்ல கொட்டி போறா ...

எரச்ச வித முளைக்கும்

எளவு வீடு எப்படி சிரிக்கும்

0 Responses

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.